MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

பழனி மலைக் கோவிலுக்குச் செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜனவரி 30) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும். பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதையைப் பயன்படுத்தி கோயிலுக்குச் செல்லலாம்.

1 Min read
vinoth kumar
Published : Jan 29 2025, 12:52 PM IST| Updated : Jan 29 2025, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் பழனி கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது. 

25
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

35
ரோப் கார் சேவை

ரோப் கார் சேவை

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். 

45
மாதாந்திர பராமரிப்பு பணி

மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி 30ம் தேதி அதாவது நாளை ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க:  மினி பேருந்து கட்டணம் உயர்வு! எவ்வளவு உயர்ந்தது? எப்போது முதல்!

55
ரோப் கார் சேவை நாளை ஒருநாள் நிறுத்தம்

ரோப் கார் சேவை நாளை ஒருநாள் நிறுத்தம்

ஆகையால் ரோப் கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பழனி முருகன் கோவில்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved