- Home
- Tamil Nadu News
- பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
வார இறுதி, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
வார இறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வார விடுமுறை வளர்பிறை முகூர்த்தத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu State Transport Corporation
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தம் பிப்ரவரி 01ம் தேதி சனிக்கிழமை மற்றும் 02ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Transport Department
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 365 பேருந்துகளும்,பிப்ரவரி 01ம் தேதி சனிக்கிழமை 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Weekend Special Buses
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்களும் பிப்ரவரி 01ம் தேதி சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Government Bus
மாதாவரத்திலிருந்து 31ம் தேதியன்று 20 பேருந்துகளும் பிப்ரவரி 01ம் தேதி அன்று 20 பேருந்துகளும் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,625 பயணிகளும், சனிக்கிழமை 6,330 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,130 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
Transport Department
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.