MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் இணையப்போகிறேனா.!! நான் B டீமா.? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்

திமுகவில் இணையப்போகிறேனா.!! நான் B டீமா.? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு மட்டுமே, அரசியல் நோக்கம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 2026 தேர்தலில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Ajmal Khan
Published : Aug 04 2025, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஓபிஎஸ் அரசியல் பயணம்
Image Credit : our own

ஓபிஎஸ் அரசியல் பயணம்

அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறார். மீண்டும் அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சி மேற்கொண்ட பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலை நீடித்து வருகிறது. 

அந்த வகையில் பாஜகவை நம்பிய நிலையில் பாஜகவும் கை விரித்துவிட்டதால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் தான் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை, ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

25
ஸ்டாலினை சந்தித்தது ஏன்.?
Image Credit : x/ mk stalin

ஸ்டாலினை சந்தித்தது ஏன்.?

அந்த  அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.

இந்த வகையில், முதலமைச்சர் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர்  மு.க. முத்து அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு.

Related Articles

Related image1
சும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!
Related image2
ஓபிஎஸ் சொல்வது பொய்! அவர்கிட்ட ஆதாரம் இருக்கானு கேளுங்க! நயினார் ஆவேசம்! தமிழிசை சப்போர்ட்!
35
திமுகவுடன் கூட்டணியா.?
Image Credit : our own

திமுகவுடன் கூட்டணியா.?

என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் அவர்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் 'B' Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

45
ஜெயலலிதா ஆட்சி அமைப்பதே இலக்கு
Image Credit : Asianet News

ஜெயலலிதா ஆட்சி அமைப்பதே இலக்கு

என்னைப் பொறுத்தவரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில் அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் மாண்டமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான “பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.

55
பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை ஏன்.?
Image Credit : our own

பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை ஏன்.?

அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான். இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். 

அம்மா அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால்  அம்மா அவர்களின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
அதிமுக பாஜக கூட்டணி
எடப்பாடி பழனிசாமி அதிமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved