- Home
- Tamil Nadu News
- மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
தமிழகத்தில் கடும் வெயிலால் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் எந்தப் பகுதியிலும் மின்தடை இல்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை(TANGEDCO) சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருவதால் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமல்ல தமிழகத்தில் கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் மின்வாரியத்திற்கு உடனே போன் செய்து கரண்ட் எப்போது வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம். அதாவது மாதத்தின் முதல் நாள் என்பதால் இன்று தமிழகம் முழுவதும் எந்த பகுதிகளிலும் மின்தடை இல்லை. இதனால் பொதுமக்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.