MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Sowmya Anbumani: “மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC.! சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி..!

Sowmya Anbumani: “மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC.! சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக சௌமியா அன்புமணி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 20 2026, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி
Image Credit : google

சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி

தமிழ்நாட்டில் நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், நுழைவுத் தேர்வு மூலம் வெளிமாநிலத்தவர்களை என்எல்சி நிறுவனம் தேர்வு செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம்
Image Credit : our own

மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம்

சட்டப்பேரவையில் சிறப்பு கவனயீர்ப்பின் மீது பேசிய அவர், “தமிழ்நாட்டிலேயே மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால் அது என்எல்சி நிறுவனம்தான்” என விமர்சித்தார். விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதுடன், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி நிலத்தையும் பாதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

Related Articles

Related image1
CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
Related image2
STR on CM Vijay: அரசியல் பிரவேசம் எப்போது.! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.! என்ன சொன்னார் தெரியுமா?!
34
நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கவில்லை
Image Credit : our own

நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கவில்லை

மேலும், தலைமுறை தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக்கொண்ட என்எல்சி நிறுவனம், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்காமல் நுழைவுத் தேர்வு நடத்தி வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். “மருத்துவப் படிப்புக்கு ஆள் எடுப்பது போல ஏன் நுழைவுத் தேர்வு நடத்துகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியான சிஎஸ்ஆர் நிதி முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறினாலும், அவை பெரும்பாலும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

44
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது
Image Credit : our own

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், என்எல்சி நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் விவசாயிகள் பக்கமே இருக்கும் என்றும், அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், பிரச்சினையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aawin Milk Price: ஆவின் பால் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு?! தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக நடக்கும் சம்பவம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?
Recommended image2
Air Pollution : எல்லை தாண்டும் விஷக்காற்று! தமிழகம், கேரளாவுக்கு எச்சரிக்கை மணி!
Recommended image3
தமிழக உரிமைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.! அடித்து தூள் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்.!
Related Stories
Recommended image1
CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
Recommended image2
STR on CM Vijay: அரசியல் பிரவேசம் எப்போது.! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.! என்ன சொன்னார் தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved