MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திய பயனாளிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி தேதியிலிருந்து மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

2 Min read
vinoth kumar
Published : Nov 25 2025, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திமுக தேர்தல் வாக்குறுதி
Image Credit : Google

திமுக தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

25
மகளிர் உரிமை தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமை தொகை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மகளிர் உரிமை தொகை பெறமுடியாத மகளிர்கள் திமுக அரசின் மீது கோவத்தில் இருந்து வந்தனர்.

Related Articles

Related image1
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Related image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
35
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது?
Image Credit : magalir urimai thogai

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது?

இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை அக்கவுண்டில் வரும் என்ற தகவலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

45
 முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Image Credit : our own

முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் திருவள்ளூர் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

55
இதுவரை சுமார் ரூ.26,000 வரவு
Image Credit : tndipr

இதுவரை சுமார் ரூ.26,000 வரவு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.30,000 கோடி மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை சுமார் ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது.' இந்தசூழலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
உதயநிதி ஸ்டாலின்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
நவம்பர் 27, விஜய் உடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்... அதிரும் அரசியல் களம்
Recommended image2
நந்தினி மீது தீராத சந்தேகம்! நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கங்காதரன்! அம்மா.. அம்மா.. கதறும் குழந்தைகள்!
Recommended image3
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Related Stories
Recommended image1
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved