- Home
- Tamil Nadu News
- 210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12

Image Credit : Asianet News
மதுராந்தகத்தில் NDA பொதுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் கைகோர்த்தனர்.
22
Image Credit : x
210 இடங்களில் வெற்றி பெறுவோம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''மக்களை வாட்டி வதைக்கும் திமுக ஆட்சி தேவையில்லை. திமுக ஆட்சி மக்களுக்கு கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். ஏனெனில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.
Latest Videos

