MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களே ரெடியா.? தொடங்கியது போட்டி- வெளியான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர்களே ரெடியா.? தொடங்கியது போட்டி- வெளியான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

17 வயதுக்குட்பட்டோருக்கான 68வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. 33 அணிகளிலிருந்து 396 மாணவிகள் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Jan 16 2025, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
school student

school student

மாணவர்களும் கல்வியும்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு மட்டுமல்ல விளையாட்டு போட்டியிலும் மாணவர்கள் பங்கெடுக்கும் வகையில் வட்டார, மாவட்ட, மாநில அளிவிலான போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) இணைந்து நடத்தும் 68 வது தேசிய அளவிலான 17-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

24
sports meet

sports meet

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

இந்த போட்டியானது இன்று முதல் வருகிற 19ஆம் தேதி வரை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி செம்மஞ்சேரியில் நடைபெறுகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் குறுவட்டப் போட்டிகள் முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ 12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

34

தேசிய அளவிலான போட்டி

2024-2025 ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) 46 வகையான விளையாட்டுப் போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது.  இவ்விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் தமிழ்நாடு அணிகள் பங்குபெற்றுவருகின்றனர் 

44

போட்டியின் விவரம்:

68 வது தேசிய அளவிலான (SGFI) 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கூடைப்பந்து (BASKETBALL) விளையாட்டுப் போட்டிகள்

பங்குபெறுபவர் விவரம்:

அணிகளின் எண்ணிக்கை -33

மாணவியர்களின் எண்ணிக்கை 396

அணி மேலாளர்கள், பயிற்றுநர்கள் எண்ணிக்கை 99

நடுவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை. 150

என பங்கேற்பவர்களின் மொத்த எண்ணிக்கை- 645

வெற்றிக்கோப்பை விவரம்

முதலிடம்பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும். 12 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களும்

இரண்டாமிடம் பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும், 12 மாணவிகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும்,

மூன்றாமிடம்பெறும் அணிக்கு வெற்றிக்கோப்பையும் 12 மாணவிகளுக்கு வெண்கலப்பதக்கங்களும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved