MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி

தமிழகத்தை அதிர வைத்த இரட்டை படுகொலை! 4 பேர் ஐசியூவில்! என்ன நடந்தது..? அதிர்ச்சி பின்னணி

Double Murder: ரவுடி கும்பல் விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 03 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கஞ்சா போதை கும்பல்
Image Credit : our own

கஞ்சா போதை கும்பல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் திடீரென வெறிச் செயலில் ஈடுபட்டனர். அதாவது சாலையில் எதிரே வந்தவர்களை எல்லாம் அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டினர். பின்னர் அங்குள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டீ கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

25
இரட்டை கொலையால் பதற்றம்
Image Credit : our own

இரட்டை கொலையால் பதற்றம்

இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனை பார்த்த அந்த ரவுடி கும்பல், அவர்களை விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் மாற்றுத்திறனாளியான ஜான் (50) மற்றும் வடமாநில தொழிலாளி செங்கல் சூளை தொழிலாளி உள்ளிட்ட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Articles

Related image1
தவெகவில் இணையபோகும் அந்த முக்கிய விஐபி யார்? ட்விஸ்ட் வைத்து பேசிய செங்கோட்டையன்! அலறும் திமுக, அதிமுக!
Related image2
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
35
போதை கும்பல் குறித்து போலீஸ் விசாரணை
Image Credit : our own

போதை கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

அதே பகுதியை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி ஆகியோரும் படுகாயமடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகும் வெறி அடங்காத கும்பல் கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து ஒரு சிலரை வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

45
 பொதுமக்கள் சாலை மறியல்
Image Credit : Asianet News

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மர்ம கும்பலின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பெரும்பத்து பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

55
போக்குவரத்து துண்டிப்பு
Image Credit : Asianet News

போக்குவரத்து துண்டிப்பு

கஞ்சா போதையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சாதிய மோதலால் இந்த கொடூர நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரியில் பட்டியலின தெருவுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டைகள் போன்றவற்றை சாலையின் குறுக்கே போட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
திருநெல்வேலி
தமிழ்நாடு குற்றச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக மக்களே அக்கவுண்ட் செக் பண்ணீங்களா..? முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.3500 போட்ருக்காரு
Recommended image2
Now Playing
காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
Recommended image3
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Related Stories
Recommended image1
தவெகவில் இணையபோகும் அந்த முக்கிய விஐபி யார்? ட்விஸ்ட் வைத்து பேசிய செங்கோட்டையன்! அலறும் திமுக, அதிமுக!
Recommended image2
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved