MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அவனே ஓடிடுவான்..! விஜய் குறித்து நக்கீரன் கோபால் பகீர்

அவனே ஓடிடுவான்..! விஜய் குறித்து நக்கீரன் கோபால் பகீர்

கரூர் போன்று இன்னும் 2 நிகழ்ச்சிகள் நடந்துவிட்டால் விஜய் தாமாகவே அரசியலை விட்டு ஓடிவிடுவார் அவரை யாரும் துரத்த வேண்டியதில்லை என மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விமர்சித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Oct 11 2025, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் அரசியலை விட்டே ஓடிவிடுவார்..
Image Credit : Asianet News

விஜய் அரசியலை விட்டே ஓடிவிடுவார்..

பிரபல நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரூர் சம்பவத்தை மையமாக வைத்து விஜய்யை அரசியலை விட்டே விரட்ட சிலர் செயல்படுவாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரை அரசியலை விட்டு விரட்ட நக்கீரன் கோபால் தேவையில்லை. கரூர் போன்று இன்னும் 2 நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிட்டால் அவரே தாமாக ஓடிவிடுவார்.

24
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே நியாயம்
Image Credit : X

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே நியாயம்

வெகுஜன விரோதிகளை நக்கீரன் விட்டு வைக்காது. விஜய் வெகுஜன விரோதி. கரூரில் 41 பேர் உயிரிழந்து கிடக்கின்றனர். அவர்களைக் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் சென்ற ஒருவர் 13 நாட்களுக்கும் மேலாக வீட்டைவிட்டே வெளியே வராமல் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிலர் சிவப்பு கம்பலம் விரித்து வரவேற்கின்றனர். நான் இப்படிப்பட்ட வேலையை செய்ய மாட்டேன். அரசியலில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே நியாயம். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

Related Articles

Related image1
ரொம்ப அகங்காரம் பிடித்தவர் விஜய்..! அடிக்கப் பாய்ந்த நெப்போலியன்.. திமுக பேச்சாளர் பகீர்!
Related image2
தெறிக்கவிடும் எடப்பாடி-விஜய் போஸ்டர்கள்..! தோள் கொடுக்க இபிஎஸ் மட்டும் போதும்.. தவெகவினர் நெகிழ்ச்சி!
34
ரூ.20 லட்சம் வரும் வரை விஜய்க்கு ஆதரவாக பேசுவார்கள்..
Image Credit : Asianet News

ரூ.20 லட்சம் வரும் வரை விஜய்க்கு ஆதரவாக பேசுவார்கள்..

கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களே சிலர் விஜய்யை குற்றம் சொல்ல வேண்டாம், அவர் என்ன செய்வார் என்று கேள்வி கேட்கின்றனர். விஜய் அறிவித்த ரூ.20 லட்சம் இழப்பீடு வரும் வரை தான் அப்படி பேசுவார்கள்.

44
சாட்சியங்களை கலைக்கும் விஜய்..?
Image Credit : Asianet News

சாட்சியங்களை கலைக்கும் விஜய்..?

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாட்சியங்கள். அவர்களுடன் விஜய் எப்படி பேச முடியும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு வழக்கு பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவரது செயல்பாடுகள் சாட்சியங்களைக் கலைக்கும் முயற்சி என்று கருதப்படும். ஆனால் சிறப்பு விசாரணை குழு அதனை செய்யவில்லை. இதனால் விஜய் தப்பித்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved