MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அசைவ பிரியர்களுக்கு குட் நியூஸ்! மட்டன் விலை குறித்து "மாசா"ன அறிவிப்பு

அசைவ பிரியர்களுக்கு குட் நியூஸ்! மட்டன் விலை குறித்து "மாசா"ன அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி ஒரே விலையில் விற்கப்படும். அரசு தினசரி விலையை இணையதளத்தில் வெளியிடும். இந்த திட்டம் நுகர்வோர் நலன், சீரான சந்தை நிலையை நோக்கமாகக் கொண்டது.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 26 2025, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஒரே விலை ஒரே தரம் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
Image Credit : our own

ஒரே விலை ஒரே தரம் - அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம், வெவ்வேறு பகுதிகளில் விலை வேறுபாடுகள் இல்லாமல், நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு ஏற்ற விலையில் மட்டுமே இறைச்சி விற்கப்படும்

28
திட்டத்தின் நோக்கம் என்ன?
Image Credit : our own

திட்டத்தின் நோக்கம் என்ன?

இது ஒரு முக்கியமான தீர்மானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான நுகர்வோர் ஏற்கனவே சந்தையில் உள்ள விலை ஏற்றத்தாழ்வால் குழப்பமடைந்து வருகின்றனர். நகரம், கிராமம், நகராட்சி பகுதிகள் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விலையில் இறைச்சி விற்கப்படுகிறது. இதில் பல இடங்களில் கருப்புச்சந்தை (Black Market) விலை நிர்ணயத்தை தீர்மானிக்கின்றது. இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு தலைமையிலான விலை நிர்ணய கட்டமைப்பை கொண்டு வருவது முக்கியம்.

Related Articles

Related image1
தினமும் அசைவம் சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும்?
Related image2
குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?
38
இணையதளம் வழியாக விலை அறிவிப்பு
Image Credit : our own

இணையதளம் வழியாக விலை அறிவிப்பு

இறைச்சி விலையை அரசே நிர்ணயித்து, தினசரி அதனை அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இணையதளத்தில் விற்பனைக்கான தினசரி விலை, விலைக்கு பின்வாங்கப்படும் காரணங்கள், விலை நிர்ணய குழுவின் அறிக்கைகள், மற்றும் சந்தை நிலவரம் ஆகிய தகவல்களும் கிடைக்கும். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இருவரும் இந்த தகவலை நேரடியாக பார்வையிட்டு, விலை குறித்த தெளிவும் நம்பிக்கையும் பெற முடியும்.

48
உழவர் மற்றும் வியாபாரிகள் எப்படி பயனடைவார்கள்?
Image Credit : Getty

உழவர் மற்றும் வியாபாரிகள் எப்படி பயனடைவார்கள்?

விலை நிர்ணயம் நியாயமானதும், முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்பதால் உழவர்கள் தங்களது விற்பனை எண்ணிக்கையை திட்டமிடலாம். வியாபாரிகள் தங்கள் தினசரி கொள்முதல் விலையை அநுசரிக்க வசதியாக இருக்கும். உள்ளூர் சந்தைகளில் உள்ள நேரடி விலை போட்டியை தவிர்க்கும் வகையில், ஒரே விலை நிர்ணயத்தின் கீழ் இறைச்சி விற்பனை நடக்கும்.

58
சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள்
Image Credit : our own

சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள்

அரசு வெளியிடும் விலைக்கு மேல் விற்பனை செய்தால், அது வணிக ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாக கருதப்படும். இதற்கான தண்டனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட்டு, வியாபாரிகளுக்கான வழிகாட்டி வெளியிடப்படும்.

68
மற்ற மாநிலங்களில் இதுபோல் உள்ளதா?
Image Credit : our own

மற்ற மாநிலங்களில் இதுபோல் உள்ளதா?

கேரளா

கேரளா மாநிலத்தில் “MEAT PRODUCTS OF INDIA” என்ற அரசு நிறுவனத்தின் கீழ், கோழி மற்றும் மாடிறைச்சி வகைகள் திட்டமிட்டு விற்கப்படுகின்றன. தினசரி விலைகள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

கர்நாடகா

பெங்களூரு நகராட்சிக்குள் உள்ள மாம்ச விற்பனை நிலையங்களில், BBMP (Bruhat Bengaluru Mahanagara Palike) துறை ஒரே விலையில் இறைச்சி விற்பனை செய்யக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம்

இந்த மாநிலங்களில் ஒரே விலை நடைமுறை இல்லை. விற்பனையாளர்கள் தாங்கள் விரும்பும் விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் இடையே பெரும் விலை வேறுபாடு காணப்படுகிறது.

78
வியாபாரிகள் மீதான எதிர்வினை
Image Credit : Google

வியாபாரிகள் மீதான எதிர்வினை

இதற்கான முதல் நிலை ஆலோசனைக்கூட்டங்களில், சில வியாபாரிகள் விலை கட்டுப்பாடுகள் வணிக சுதந்திரத்துக்கு எதிராக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு இந்த திட்டம் நுகர்வோர் நலனுக்காக மட்டுமே என்பதை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க இணையதளத்தில் ஒரு பொதுமக்கள் கருத்து வடிவம் (Public Feedback Form) செயல்படுத்தப்படும்.

88
நியாயமான விலை கிடைக்கு்ம
Image Credit : Google

நியாயமான விலை கிடைக்கு்ம

தமிழ்நாடு அரசின் இந்த புதிய முயற்சி, நியாயமான விலை கட்டுப்பாடு, சீரான சந்தை நிலை, நுகர்வோர் நலன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. மற்ற மாநிலங்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே விலை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கோழி, மாடிறைச்சி, மீன் போன்ற பிற இறைச்சி வகைகளுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்புடன், மாநிலம் முழுவதும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு புதிய ஒழுங்குமுறை அமைப்பாக உருவாகும் என்று நம்பலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆட்டுக்கறி குழம்பு
தமிழ்நாடு அரசு
விலைவாசி
விவசாயம்
முதலீடு
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved