MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 34 வயது பிந்து! 2வது க.காதலனும் கழற்றிவிட்டதால் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?

இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 34 வயது பிந்து! 2வது க.காதலனும் கழற்றிவிட்டதால் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?

கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலன் கைவிட்டதால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலன் தனது குடும்பத்துடன் செல்வதாக கூறியதால், மனமுடைந்த பெண் விஷ மாத்திரை தின்று உயிரை மாய்த்துக் கொண்டார். 

1 Min read
vinoth kumar
Published : Nov 18 2025, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியை சேர்ந்தவர் பிந்து (34). இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் 5ம் வகுப்பு படித்த போது ஜெயக்குமார் இறந்து விட்டார். பின்னர் பிந்து மருதம்பாறையை சேர்ந்த வின் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து எல்கேஜி படித்தார்.

24
Image Credit : Getty

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிந்து 2வது கணவரையும் பிரிந்து மகன், மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே பிந்துவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். விஜிக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் விஜியின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இதையடுத்து விஜி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிந்து, அவருக்கு பிறந்த 5ம் வகுப்பு படிக்கும் மகன், எல்கேஜி படிக்கும் மகள் ஆகியோருடன் கடையாலுமூடு அருகே பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். இதன்பிறகு விஜி பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை வீட்டில் பிந்துவுடன் தங்கி வந்துள்ளார்.

Related Articles

Related image1
என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
Related image2
உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை
34
Image Credit : Asianet News

இந்நிலையில் விஜி வீட்டுக்கு வராததால் அவரது மனைவி அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விஜியிடம் விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் விஜி தனது மனைவி, பிள்ளைகளிடம் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதனை அறிந்தும் பிந்து விஜியிடம் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார்.

44
Image Credit : our own

இதனால் விரக்தியுடன் உச்சிக்கே சென்ற பிந்து தென்னைக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved