- Home
- Tamil Nadu News
- தமிழ்நாட்டை அண்ணா தான் ஆட்சி செய்கிறார்.. பாஜகவின் ஆணவத்துக்கு தமிழகத்தில் Get Out தான்.. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டை அண்ணா தான் ஆட்சி செய்கிறார்.. பாஜகவின் ஆணவத்துக்கு தமிழகத்தில் Get Out தான்.. முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசின் ஆணவத்துக்கும், ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் Get Out தான் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா நினைவு தினம்
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிகழ்ச்சிளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. மேலும் தலைநகர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அண்ணா
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே… pic.twitter.com/UpPESH4TKE— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 3, 2026
தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்..
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

