- Home
- Tamil Nadu News
- Tamilnadu Government: 3 நாள் போதும்... லட்சங்களில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.! விண்ணப்பிப்பது எப்படி?
Tamilnadu Government: 3 நாள் போதும்... லட்சங்களில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.! விண்ணப்பிப்பது எப்படி?
Drone Training: ட்ரோன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது திருமண நிகழ்ச்சி முதல் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை தேடுவது வரை பயன்பாடு இருந்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசு ட்ரோன் பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு
தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரோன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது திருமண நிகழ்ச்சி, தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறைகள், டிவி செய்திகள், அரசியல் மேடைகள், ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயத் துறைகள், மறைவான இடங்களில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை தேடுவதிலும் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ட்ரோன் பயிற்சி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து தமிழக அரசு பயிற்சி வழங்குகிறது.
ட்ரோன் மூன்று நாட்கள் பயிற்சி
அதன்படி தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மீடியா ட்ரோன் பயிற்சி' வரும் ஜூலை 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்:
* ட்ரோன் தொழில்நுட்பம் - அறிமுகம்
* ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள்
* வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் – அறிமுகம்
* FPV சினிமாடோகிராஃபி
* DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு
மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்
* திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.
* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.
* ஆவணப்பட தயாரித்தல்.
* விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.
* கார்ப்பரேட் திரைப்படங்கள்.
* யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.
*காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.
* நிகழ்ச்சி செய்தி களிப்பு.
* சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.
* ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.
* தொழிற்துறை புகைப்படம்.
*காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.
* தீ மற்றும் மீட்பு பணிகள்.
* அரசுத் திட்டங்கள்.
10-ம் வகுப்பு தேர்ச்சி
மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் Www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032 பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

