MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை ஆதீனம் கார் விபத்து! திட்டமிட்ட சதி! சொல்வது யார் தெரியுமா?

மதுரை ஆதீனம் கார் விபத்து! திட்டமிட்ட சதி! சொல்வது யார் தெரியுமா?

சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெறும் சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி தப்பினார். 

1 Min read
vinoth kumar
Published : May 03 2025, 08:39 AM IST| Updated : May 03 2025, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு

madurai adheenam: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த மாநாடு மதுரை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. 

24
சென்னை நோக்கி வந்த போது கார் விபத்து

சென்னை நோக்கி வந்த போது கார் விபத்து

மதுரை ஆதீனத்தின் கார் விபத்து

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், நீதிபதிகள், சிவாச்சாரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை வந்துக்கொண்டிருந்த போது மற்றொரு கார் மோதியது. 

Related Articles

Related image1
எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன்! இதுபோன்ற ஒருவரை பார்த்தது இல்லை! RN.ரவியை புகழ்ந்து தள்ளிய மதுரை ஆதினம்
Related image2
பஹல்காம் தாக்குதல்! இதற்கெல்லாம் மூலக்காரணமே இவங்க தான்! மதுரை ஆதீனம் சொன்ன பகீர்!
34
தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனம்

அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்த காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இந்த விபத்து திட்டமிட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
 

44
மதுரை ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

மதுரை ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

திட்டமிட்ட சதி

இதுதொடர்பாக தருமபுரம் ஆதீனம் சமூக வலைதள பக்கத்தில்: மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட  சதியாக தெரிகிறது. இறை அருளால் மதுரை ஆதினத்திற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.  கார் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது. மதுரை ஆதினத்தை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
மதுரை
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved