MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னால தான் அவன் செத்தான்! அவ போன இடத்துக்கு நான் போயிர்றேன்! இப்படியும் ஒரு காதலா!

என்னால தான் அவன் செத்தான்! அவ போன இடத்துக்கு நான் போயிர்றேன்! இப்படியும் ஒரு காதலா!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் தகராறில் காதலன் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த பள்ளி மாணவியான காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Sep 17 2025, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பூபதி
Image Credit : Asianet News

பூபதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியிலும் செல்வது மட்டுமல்லாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

24
பள்ளி மாணவியுடன் காதல்
Image Credit : iSTOCK

பள்ளி மாணவியுடன் காதல்

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பூபதிக்கும், மாணவிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டு இது வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி இனிமேல் எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன், பேசமாட்டேன். நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆசை ஆசையாய் காதலித்த காதலி அப்படி சொல்லிவிட்டாலே என்ற மன வருத்தத்தில் பூபதி இருந்துள்ளார். குடும்பத்தில் யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார்.

Related Articles

Related image1
அமித்ஷா சந்திப்பில் இபிஎஸ் உடன் பக்கத்தில் இருந்தது யார் தெரியுமா? உண்மையை போட்டுடைத்த டிடிவி.தினகரன்!
Related image2
கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கலாம் நினைச்சனே! அநியாயமா கொ*னுட்டாங்க.! உங்கள சும்மா விடமாட்டேன்டா! கதறும் காதலி!
34
தூக்கிட்டு தற்கொலை
Image Credit : iSTOCK

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர் அழுது கதறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் பூபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபத்தில் தான் பேசியதால் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அலறி கூச்சலிட்டனர்.

44
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் விசாரணை
Image Credit : our own

ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் விசாரணை

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியும் விபரீத முடிவு எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved