MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 47 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவைக்கு புயல்! ஊட்டியில் நிலச்சரிவா? கோவை வெதர்மேன் எச்சரிக்கை!!

47 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவைக்கு புயல்! ஊட்டியில் நிலச்சரிவா? கோவை வெதர்மேன் எச்சரிக்கை!!

Cyclone to Coimbatore: 1977-க்கு பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். 

1 Min read
SG Balan
Published : Nov 30 2024, 12:26 PM IST| Updated : Nov 30 2024, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Cyclone Fengal moves to Coimbatore

Cyclone Fengal moves to Coimbatore

கோயம்புத்தூர் வெதர்மேன்:

1977-க்கு பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஃபெங்கல் புயல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா சென்று அரபிக்கடல் செல்லும் எனவும் இதனால் ஊட்டியில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

23
Coimbatore weatherman

Coimbatore weatherman

கோவைக்கு அலர்ட்:

செய்தியாளர்களிடம் பேசயி சந்தோஷ் கிருஷ்ணன், "1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்தப் புயல் சின்னம் பயணிக்கப் போகிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம்" என்றார்.

குறிப்பாக, "கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழையை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

33
Santhosh Krishnan Predicted rain to Coimbatore

Santhosh Krishnan Predicted rain to Coimbatore

நீலகிரிக்கு எச்சரிக்கை: பொதுவாக புயல்கள் கொங்கு பகுதி வழியாக பயணிக்காது. இது மிக அரிதான நிகழ்வு. இதனால் ஊட்டியில் அதி கனமழை பெய்யக்கூடும். 30-40 செ.மீ. வரை கூட மழை பெய்யலாம். வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. டிசம்பர் 1 முதல் 3 வரை ஊட்டிக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் கோவை வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

கோவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், சென்னையைப் போல பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கோயம்புத்தூர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved