இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்.. த.வெ.க.-வை பொளந்து கட்டிய திமுக!
நடிகர் விஜயின் தவெக, கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் போலியானவை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். மலிவான அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

கரூர் வழக்கில் மலிவான அரசியல்!
நடிகர் விஜயின் தவெக இறந்தோவர்களை வைத்து மலிவான அரசியல் செய்கிறது என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது திட்டமிட்ட அரசியல் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கரூர் த.வெ.க. கூட்ட நெரிசல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள தகவல்கள், நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த மனுக்களில் ஒன்று, உண்மையில் இறந்தவரின் சட்டப்பூர்வமான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்றொரு மனுவில், சம்பந்தப்பட்ட நபர் ஆவணங்களில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலையில், கையொப்பமிடத் தூண்டப்பட்டிருக்கிறார்.
திட்டமிட்ட அரசியல் செயல்
இது, நீதித்துறை செயல்முறையைத் தன் விருப்பப்படி கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் செயல் ஆகும். இது, மலிவான அரசியல் ஆதாயத்திற்காக, உயிரிழப்பின் துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்தும் ஒரு ஆபத்தான முயற்சி.
நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றும் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்தச் செயலின் பின்னணியில் உள்ளவர்கள், அவர்கள் தகுதியான கடுமையான தண்டனையுடன் கையாளப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்."
இவ்வாறு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.