ஒரே கட்சி.. ஒரே மேடை.. எம்ஜிஆர்–கருணாநிதி பிரிவுக்கு இந்த சம்பவம் தான் காரணமா?
தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்பமாக கருணாநிதி–எம்ஜிஆர் பிரிவு பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியலை இரண்டு வலுவான பாதைகளாக மாற்றிய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எப்போதும் விவாதத்தை எழுப்பும் ஒரு கேள்வி உள்ளது. கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஒரே கட்சியில் இருந்து பிரிந்ததற்கு உண்மையில் யார் காரணம்? ஒரே மேடையில் நின்று முழக்கமிட்ட இரண்டு ஆளுமைகள், பின்னர் அரசியல் எதிரிகளாக மாறியது வெறும் தனிப்பட்ட மோதலா, அல்லது அந்த காலகட்ட அரசியல் சூழ்நிலையின் விளைவா என்ற கேள்வி, இன்றும் பலரின் மனதில் உள்ளது. இந்த பிரிவு ஒரு நாளில் நடந்தது அல்ல. அது பல சம்பவங்கள், பல உணர்ச்சிகள் சேர்ந்து ஒரு நீண்ட பயணம்.
1960-களில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். கருணாநிதி, கட்சியின் கொள்கை முகமாகவும், எழுத்து, பேச்சு, அரசியல் என அனைத்திலும் திறமை காட்டிய ஒரு ‘ஐடியாலஜிக்கல் பிரெயின்’ ஆகவும் உருவெடுத்தார். மறுபுறம், எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர் நடித்த கதாபாத்திரங்கள் ஏழை மக்களின் மனதில் நியாயம், தைரியம், கருணை என்ற படிமத்தை உருவாக்கின. அந்த புகழ், திமுக மேடைகளிலும் பிரதிபலித்தது. மக்கள் கூட்டம் திரும்ப வந்தது. அது திமுக என்ற கட்சிக்கும் அது ஒரு பெரிய பலமாக இருந்தது.
ஆனால், கட்சி வளர்ந்த அளவுக்கு, கட்சிக்குள் அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு குறித்த கேள்விகள் எழுந்தன. கருணாநிதியின் பார்வையில், ஒரு அரசியல் இயக்கம் தனிநபர் புகழில் இயங்கக் கூடாது. கட்சியின் ஒழுக்கமும், கூட்டுத் தலைமையும் முக்கியம். எம்.ஜி.ஆர்-ன் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபோது, அந்தக் கட்சிக்குள் ஒரு புதிய சமநிலையை உருவாக்கியது. இதுதான் திருப்புமுனை. ‘பார்டி டிஸிப்ளின்’ மற்றும் ‘ஸ்டார் பவர்’ இடையேயான மோதல் மெதுவாக வெளிப்பட்டது என்று அரசியல் நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், தலைமையை கேள்வி கேட்பது, கட்சிக்குள் விவாதங்களை உருவாக்கியது. எம்.ஜி.ஆர் தன்னை மக்கள் பிரதிநிதியாகப் பார்க்க விரும்பினார். மக்கள் ஆதரவை அரசியலின் மையமாகக் கருதினார். அதே நேரத்தில், கருணாநிதி, கட்சி கட்டுப்பாட்டை மீறி எந்த சக்தியையும் ஆபத்தாகவே பார்த்தார். இதன் உச்சமாக, எம்.ஜி.ஆர் மீது ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை கருணாநிதி தரப்பு ‘கட்சியின் கட்டுப்பாட்டு நடவடிக்கை’ என விளக்கியது. ஆனால், எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அதை ஒரு அவமதிப்பாக உணர்ந்தனர்.
பிரிவு நடந்த பிறகு, இரு தரப்பின் பார்வைகள் முற்றிலும் மாறுபட்டவை. கருணாநிதி பார்வையில், அந்த முடிவு கட்சியின் எதிர்காலத்தை காக்க எடுத்த கடினமான தீர்மானம். அதேபோல எம்.ஜி.ஆர் பார்வையில், அது மக்கள் விருப்பத்தை மதிக்காத அணுகுமுறை. இதன் விளைவாக, எம்.ஜி.ஆர் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக மாறியது. திமுகவும் தனது கொள்கைப் பாதையில் உறுதியாக தொடர்ந்தது.
அப்படியானால், இந்த பிரிவுக்கு ஒரே நபரை குற்றம் சாட்ட முடியுமா? அல்லது அந்த காலகட்ட அரசியல் சூழ்நிலை, மனிதர்களின் ஈகோ, அதிகார சமநிலை ஆகியவை சேர்ந்து இந்த பிளவை உருவாக்கினவையா? கருணாநிதி என்பவர் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டின் பிரதிநிதி. எம்.ஜி.ஆர் என்பவர் மக்கள் ஆதரவும் உணர்ச்சியும் பிரதிபலித்த தலைவர். இந்த இரண்டு சக்திகள் மோதிய இடத்தில்தான் வரலாறு மாறியது.

