MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய்க்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால் நீதிபதியை விமர்சிப்பதா? கொந்தளித்த நீதிபதி செந்தில்குமார்..!

விஜய்க்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால் நீதிபதியை விமர்சிப்பதா? கொந்தளித்த நீதிபதி செந்தில்குமார்..!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன் மீது அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாக மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து, கிரிசில்டா பதிலளிக்க உத்தரவிட்டார்.

1 Min read
vinoth kumar
Published : Oct 06 2025, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாதம்பட்டி ரங்கராஜ்
Image Credit : Asianet News

மாதம்பட்டி ரங்கராஜ்

திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிறிஸ்டில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

24
சென்னை உயர்நீதிமன்றம்
Image Credit : Asianet News

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மனுவுக்கு அக்டோபர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Articles

Related image1
நீதிபதியை விமர்சித்த மூன்று தவெக தொண்டர்கள் கைது..! மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் விஜய்
Related image2
ஏண்டா! அண்ணாமலை பெயரை சொல்லி போர்சரியா பண்றீங்க! பாஜக பிரமுகர்களை தூக்கிய போலீஸ்!
34
நீதிபதி செந்தில்குமார்
Image Credit : Asianet News

நீதிபதி செந்தில்குமார்

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி செந்தில்குமார்: சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

44
தவெக தலைவர் விஜய்
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் தொடர்பான வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved