MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!

Government Employee: 20 ஆண்டுகளாகப் போராடி வரும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 17 2026, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பழைய ஓய்வூதிய திட்டம்
Image Credit : Asianet News

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்களின் நியாயமான பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எவ்வித நிபந்தனையும் இன்றி நிறைவேற்றினால், அரசு இயந்திரம் சரியான திசையில் இயங்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய ஓய்வூதிய திட்டம்
Image Credit : Asianet News

புதிய ஓய்வூதிய திட்டம்

2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் (NPS - சிபிஎஸ்) அமல்படுத்தப்பட்டது. தற்போது மொத்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,864 பேர் பணியில் இருக்கும் போதே பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

Related Articles

Related image1
Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
Related image2
Preethi Raj Shetty: தவெக-வில் இணைந்த உடனே முக்கிய பொறுப்பு! விஜய்யின் சட்டப் புள்ளியாக மாறிய வழக்கறிஞர்.. யார் இந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி?
35
பங்களிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது
Image Credit : Google

பங்களிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை அரசும் பங்களிப்பாக செலுத்தும். அவசரத் தேவைக்கு அந்த நிதியிலிருந்து தொகை எடுக்கும் வசதியும் இருந்தது. மேலும், ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடை, மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வூதியர் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்கள் கிடைத்தன. ஆனால் புதிய திட்டத்தில் இத்தகைய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்தபோது பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது.

45
அறிக்கையில் என்ன இருந்தது இதுவரை வெளியாகவில்லை
Image Credit : F/Velmurugan

அறிக்கையில் என்ன இருந்தது இதுவரை வெளியாகவில்லை

தமிழ்நாட்டில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 2011ல் அதிமுக, 2016 மற்றும் 2021ல் திமுக தலைமையிலான அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தன. 2011 வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜெயலலிதா அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.

55
புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம்
Image Credit : Asianet News

புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம்

2021ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2026 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ‘TOPS’ (Tamil Nadu Old Pension Scheme) திட்டத்தை 2026 ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு பெறுபவர்களும், ஓய்வு பெற இருப்பவர்களும் பணப்பலன்கள் இன்றி மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக அரசுக்கு ஒரு லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
Recommended image2
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Recommended image3
Now Playing
"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
Related Stories
Recommended image1
Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
Recommended image2
Preethi Raj Shetty: தவெக-வில் இணைந்த உடனே முக்கிய பொறுப்பு! விஜய்யின் சட்டப் புள்ளியாக மாறிய வழக்கறிஞர்.. யார் இந்த ப்ரீத்தி ராஜ் ஷெட்டி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved