MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகும் மழை! அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகும் மழை! அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Aug 06 2025, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : Google

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
எந்தெந்த மாவட்டங்களில் மழை
Image Credit : Google

எந்தெந்த மாவட்டங்களில் மழை

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
Related image2
ஒரு மனுஷனை காதல் என்னவெல்லாம் பண்ணுது பாத்தீங்களா! எலெக்ட்ரிசியன் திருடனாக மாறியது எப்படி? விசாரணையில் அம்பலம்!
34
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

44
நேற்று பரவலாக மழை
Image Credit : ANI

நேற்று பரவலாக மழை

இதனிடையே நேற்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக உதகையில் பெய்த கனமழையின் காரணமாக அரசு பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அருகில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியதால் கார் ஆட்டோ இருசக்கர வாகனம் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved