MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Tiruvallur Government Jobs: திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 17 2026, 10:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கு பணி
Image Credit : Asianet News

ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கு பணி

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பபட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பணியிடங்கள் விவரம்
Image Credit : Asianet News

பணியிடங்கள் விவரம்

திருவள்ளூர் tiruvallur.nic.in-ல் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதள மாவட்ட முகவரி இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரியில் ஜூன் 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்

திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 7 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Related Articles

Related image1
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Related image2
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
35
வழக்கு பணியாளர் பணி
Image Credit : google

வழக்கு பணியாளர் பணி

வழக்கு பணியாளர் பணிக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை, சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) / உளவியல் (Psychology) / சட்டம் (Law) போன்றவற்றில் (Under Graduation Degree) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.18,800 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
தொழிற்நுட்ப பணியாளர் பணி
Image Credit : Asianet News

தொழிற்நுட்ப பணியாளர் பணி

Bachelors degree with a diploma in computers/IT போன்ற கல்வி தகுதியுடன், அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் தேவை. (தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்). 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

55
பல்நோக்கு உதவியாளர் பணி
Image Credit : Asianet News

பல்நோக்கு உதவியாளர் பணி

எழுத படிக்க மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.10,000 வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் (Shift) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தினை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர் கொள்ள வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2வது தளம், திருவள்ளூர் மாவட்டம் - 602001 என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044 29896049 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Recommended image2
Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Now Playing
தவெக-விற்கு ஆதரவா ?...நல்லது நடந்தால் வரவேற்பேன் ...தீமை நடந்தால் எதிர்ப்பேன் ! வைகோ அதிரடி பேட்டி
Related Stories
Recommended image1
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகுமா? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Recommended image2
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved