MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ்.! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி

அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ்.! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

1 Min read
Ajmal Khan
Published : Apr 28 2025, 06:16 PM IST| Updated : Apr 28 2025, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

Mano Thangaraj takes charge as Minister :  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமைச்சர் பதவியை இழந்துள்ளார் செந்தில் பாலாஜி, இதே போல பெண்கள் தொடர்பான சர்ச்சையான கருத்தால் கட்சி பதவியை மட்டுமில்லாமல் அமைச்சர் பொறுப்பையும் பறி கொடுத்துள்ளார் பொன்முடி,

 

23
DMK cabinet reshuffle

DMK cabinet reshuffle

பதவிப்பிரமாணம்  செய்து வைத்த ஆளுநர்

இதன் காரணமாக தற்போது அமைச்சர்களாக உள்ள சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏவான மனோ தங்கராஜ் பொறுப்பேற்பு  வழங்கப்பட்டது. 
இதனையடுத்து மனோதங்கராஜ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் இன்று மாலை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது 

33
Portfolio allocation

Portfolio allocation

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு:

எஸ் முத்துசாமி – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

ஆர் எஸ் கண்ணப்பன் – வனத்துறை மற்றும் காதி

எஸ் எஸ் சிவசங்கர் – போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்

அமைச்சராக இருந்த ஆர் எஸ் கண்ணப்பனிடம் இருந்த பால்வளத்துறை பறிக்கப்பட்டு வனத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள  மனோ தங்கராஜிற்கு மீண்டும் பால்வளத்துறை கொடுக்கபடவுள்ளது.

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என். ரவி
அமைச்சர்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved