MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?

கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?

ஆம்பூரில் கொல்கத்தாவிலிருந்து வந்த லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 Min read
vinoth kumar
Published : May 26 2025, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
லாரி அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்
Image Credit : Google

லாரி அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று பேரணாம்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கொல்கத்தாவிலிருந்து ஆம்பூருக்கு தோல் பொருட்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தோல் தொழிற்சாலை சுவரின் மீது மோதி நின்றது.

23
 17 பேர் படுகாயம்
Image Credit : Google

17 பேர் படுகாயம்

இந்த விபத்தில் அரசு பேருந்து மற்றும் லாரி முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், அரசு பேருந்தில் பயணம் செய்த காலணி தொழிற்சாலையில் பணிபுரியம் பெண் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது பாய்ந்த லேசர் லைட்! விமானி அதிர்ச்சி!
Related image2
சென்னையில் வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை! நடந்தது என்ன?
33
போக்குவரத்து பாதிப்பு
Image Credit : Google

போக்குவரத்து பாதிப்பு

மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்து தொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய அரசு பேருந்து மற்றும் லாரியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடக்கும் முன்பே முன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved