MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இம்மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி! குஷியில் துள்ளிக்குதிக்கும் 8 லட்சம் பேர்!

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இம்மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி! குஷியில் துள்ளிக்குதிக்கும் 8 லட்சம் பேர்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரையான 4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த உயர்வால் 8 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

1 Min read
vinoth kumar
Published : May 17 2025, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Image Credit : mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் பல்வேறு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 53%ல் இருந்து 55%ஆக உயர்ந்தது.

23
16 லட்சம் பயன்பெறுவர்
Image Credit : Google

16 லட்சம் பயன்பெறுவர்

01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் . இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Related Articles

Related image1
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து! 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Related image2
தமிழகத்தில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை! இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்காம்!
33
4 மாத அகவிலைப்படி
Image Credit : our own

4 மாத அகவிலைப்படி

இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள்
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved