MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ADMK : பிரிந்து இருந்தால் இனி வேலைக்கு ஆகாது.! ஒன்றிணையனும்- எடப்பாடியை உலுக்கி எடுத்த 6 மாஜி அமைச்சர்கள்

ADMK : பிரிந்து இருந்தால் இனி வேலைக்கு ஆகாது.! ஒன்றிணையனும்- எடப்பாடியை உலுக்கி எடுத்த 6 மாஜி அமைச்சர்கள்

அதிமுக மூத்த தலைவர்கள் பிரிந்து தேர்தலை சந்திப்பதால் தொடர் தோல்விகளே பரிசாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே விரைவில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது. 

2 Min read
Ajmal Khan
Published : Jul 09 2024, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தொடரும் அதிமுகவின் தோல்விகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக வாக்குகள் சிதறி தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அதிமுகவின் தொண்டர்கள் அதிருப்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர். எனவே கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

OPS vs EPS : துரோகி'பத்துத் தோல்வி'பழனிசாமி.. எனது விசுவாசத்தைப்பற்றி பேச அருகதை இல்லை-இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

 

27

அதிமுக ஒருங்கிணையனும்

வாக்குகள் சிதறுவதால் எளிதாக கிடைக்கக்கூடிய வெற்றிகள் கூட கை நழுவி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமியை மாஜி அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தற்போதைய நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளனர்.
 

37

எடப்பாடியை சந்தித்த மாஜிக்கள்

ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது நாடாளுமன்ற தோல்வி தொடர்பாக ஆலோசித்தவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தது ஏன் என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதா இருக்கும் போது பிரிந்து சென்ற பல மூத்த நிர்வாகிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

 

47
<p>sasikala and c.v.shanmugam</p>

<p>sasikala and c.v.shanmugam</p>

மறுப்பு தெரிவித்த எடப்பாடி

எனவே தற்போதைய நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.  ஆனால் கடைசிவரை இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். எனவே மீண்டும் சந்தித்து தங்களது கோரிக்கை வலியுறுத்துவார்கள் என கூறப்படுகின்றது.  

57

இரண்டரை மணி நேரம் ஆலோசனை

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக  பத்திரிக்கையாளர் லஷ்மண் கூறுகையில், நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.

EPS : திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.! நமக்கு நாமே பாதுகாப்பு.!-விளாசும் எடப்பாடி

67

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்

தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல… பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை… இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்… இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை… பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்… இனியும் தாமதிக்கக் கூடாது… இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள். எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க… வாதங்கள் தடித்து… முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும்.

77

எண்ணிக்கை அதிகரிக்கலாம்

அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்! நாரதர் கலகம் மட்டுமல்ல… ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்… முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்! என பத்திரிக்கையாளர் லஷ்மண் கூறியுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved