- Home
- Tamil Nadu News
- EPS vs OPS : 2026ஆண்டு தேர்தல் தான் இலக்கு.. ஒருங்கிணைப்புக்கு சாத்தியமா.? எடப்பாடியின் திட்டம் என்ன.?
EPS vs OPS : 2026ஆண்டு தேர்தல் தான் இலக்கு.. ஒருங்கிணைப்புக்கு சாத்தியமா.? எடப்பாடியின் திட்டம் என்ன.?
தேர்தலில் வெற்றி பெற பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியாக தகவல் வெளியான நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளதாக நிர்வாகிகள் மத்தியில எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பு தொடர்பாக எந்த வித பேச்சும் இல்லையென கூறப்படுகிறது.

<p>sasikala eps </p>
அதிமுக அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல தலைவர்கள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவதால் வாக்குகள் சிதறி தோல்வியே கிடைத்தது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அதிமுக தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என ஒரு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.
sasikala
தனித்தனியாக ஆலோசனை
ஆனால் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென கூறிய எடப்பாடி பழனிசாமி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன.? கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனநிலை தொடர்பாக விசாரித்துள்ளார்.
வெற்றிக்கான வியூகம் என்ன.?
அப்போது அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பேச்சு எழும் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக கேட்டறிந்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து தற்போதிலிருந்தே களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தனியாக ஆலோசனை
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என பேசியதாகவும், கட்சியில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ் மகன் ஹுசேன் புறப்பட்டு சென்றபின், முனுசாமி - வேலுமணி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைப்புக்கு இடமில்லை
மேலும் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக குரல் எழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், தன் ஆதரவாளர்களுடன் 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என கோஷம் எழுப்பினார். இதன் காரணமாக ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.