- Home
- Tamil Nadu News
- பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில்.. 40 வயது ரேகா செய்த வேலை.. கையும் களவுமாக சிக்கியதால் அதிர்ச்சி
பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில்.. 40 வயது ரேகா செய்த வேலை.. கையும் களவுமாக சிக்கியதால் அதிர்ச்சி
government employee women: விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட இரண்டு மின்வாரிய அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ரெட்டணை அடுத்த நாரேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). இவர் கட்டியுள்ள புதிய வீட்டிற்காக மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டனையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த முகையூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்த மின் வணிக ஆய்வாளர் ரேகா(40), ஹரிகிருஷ்ணனிடம் புதிய இணைப்பு கொடுக்க ரூ.4000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் இதுதொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டு களை கொடுத்து, மின் வணிக ஆய்வாளர் ரேகாவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி மின் அலுவலகத்துக்கு சென்று ரேகாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து ரேகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான ரேகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சென்னை ஆவடிபொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்த விவசாயி ராகவன் என்பவர், தான் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.. இவர் தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த வருவாய் மேற்பார்வையாளர், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை ராகவன் பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய புகாரில் அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

