MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமித்ஷா.வுடன் ரகசிய பேச்சு..! முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த எடப்பாடி

அமித்ஷா.வுடன் ரகசிய பேச்சு..! முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி வெளியேறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Sep 17 2025, 06:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன்
Image Credit : Asianet News

கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன்

அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நான் அந்த பணிகளை மேற்கொள்வேன் என்று அறிவித்து 10 நாள் கெடு விதித்தார். மேலும் கட்சியில் இணைக்கப்படும் தலைவர்கள் தொடர்பாக பொதுச்செயலாளரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். செங்கோட்டையனின் நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.

24
அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி
Image Credit : google

அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனை அடுத்த தினமே அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் தான் தெரிவித்த 10 நாள் கெடு முடிவடையும் தருவாயில் ஹரித்துவார் செல்வதாகக் கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சம்பவம் அதிமுக வட்டத்திலும், தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
என் பெயரை சொல்லாதீங்க கையெழுத்து போட மாட்டாங்க.. ஈபிஎஸ் முதல்வரான ரகசியத்தை உடைத்த TTV
Related image2
அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது பாஜக தான்.! எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு
34
குடியரசு துணைத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்
Image Credit : X/@CPR_VP

குடியரசு துணைத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

இந்நிலையில் குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்போவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

44
முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி
Image Credit : google

முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி

முன்னதாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமித் ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தாம் மட்டும் அமித் ஷாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதும் பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனி காரில் விடுதிக்கு சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா
அதிமுக பாஜக கூட்டணி
செங்கோட்டையன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved