MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காரில் வைக்கும் படி ஓனர் கொடுத்த கட்டுக்கட்டாக பணம்.! உண்டியலில் போட்ட டிரைவர்- தர மறுத்த கோயில் நிர்வாகம்

காரில் வைக்கும் படி ஓனர் கொடுத்த கட்டுக்கட்டாக பணம்.! உண்டியலில் போட்ட டிரைவர்- தர மறுத்த கோயில் நிர்வாகம்

பெங்களூருவில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டிரைவர், முதலாளியின் 1.51 கோடி ரூபாயை திருடி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Ajmal Khan
Published : May 16 2025, 10:29 PM IST| Updated : May 16 2025, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முதலாளிடம் பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநர்
Image Credit : our own

முதலாளிடம் பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநர்

கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜேஷ், தனது முதலாளி தோட்ட பிரசாத்திடமிருந்து 1.51 கோடி ரூபாயை திருடிச் சென்று அதில் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

24
பணத்தை திருடிய நம்பிக்கைக்குரிய டிரைவர்
Image Credit : our own

பணத்தை திருடிய நம்பிக்கைக்குரிய டிரைவர்

பெங்களூரை சேர்ந்தவர் தோட்ட பிரசாத், ஆடிட்டராக உள்ளார், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தனது கொடந்தராமபுர அலுவலகத்திலிருந்து வங்கியில் டெபாசிட் செய்ய 1.51 கோடி ரூபாயை டிரைவர் ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ், வங்கியில் பணத்தை செலுத்தாமல்  பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.  10 ஆண்டுகளாக தன்னிடம் பணிபுரிந்த டிரைவரின் துரோகம் தோட்ட பிரசாத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தோட்ட பிரசாத் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரைச் சேர்ந்த ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட பணத்தை தனது வீட்டில் வைத்து 2.5 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார் ராஜேஷ். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து 1.48 கோடி ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.

Related Articles

Related image1
Now Playing
Blackout occurred at the Golden Temple | வரலாற்றில் முதல் முறையாக பொற்கோயிலில் ஏற்பட்ட மின் தடை
Related image2
Mobile Theft : செல்போன் தொலைஞ்சு போனா உடனே நீங்க செய்ய வேண்டிய 3 விஷயங்கள் இதுதான்..
34
டிரைவர் கைது -காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
Image Credit : Asianet News

டிரைவர் கைது -காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

 காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே போலீசார் விசாரணையில் ஓட்டுநர் ராஜேஷ் சுமார் ஒரு லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினருக்காக பல வித பொருட்களை வாங்கியுள்ளனர். மீதி சுமார் ஒரு லட்சம் ரூபாயை ஒரு கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்

44
பணத்தை திருப்பி தர மறுத்த கோயில் நிர்வாகம்
Image Credit : Asianet News

பணத்தை திருப்பி தர மறுத்த கோயில் நிர்வாகம்

இதனையடுத்து அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்த நிலையில் அந்த பணத்தை கோயில் நிர்வாகம் திரும்ப தர மறுத்துள்ளது. தென்னிந்திய கோயில்களில் உண்டியல் மூலம் நன்கொடையாக வழங்கப்படும் பணம் பொதுவாக தெய்வத்திற்கு பரிசாகக் கருதப்படுகிறது, அந்த வகையில் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளனர். 

இதே போல தமிழகத்தில் பக்தர் ஒருவரின் விலை உயர்ந்த ஐ போன் கோயில் உண்டியலில் தவறி விழுந்த நிலையில் அதனை கோயில் நிர்வாகம் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பெங்களூரு
குற்றம்
காவல்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved