MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • களத்தில் இறங்கிய இபிஎஸ்! வேறு வழியில்லாமல் திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம்! ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி!

களத்தில் இறங்கிய இபிஎஸ்! வேறு வழியில்லாமல் திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம்! ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 20 2025, 08:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
Image Credit : Asianet News

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பளராக இருந்து வந்தார். இவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அரக்கோணத்தில் எங்கு புகார் மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததை அடுத்து டிஜிபி அலவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

24
எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே? என கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Articles

Related image1
20 பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்.! இரவு நேரத்தில் தொடர்ந்த இச்சை- திமுக நிர்வாகியின் மீது பகீர் புகார்
Related image2
அமைச்சர் PAக்கு இளம்பெண்ணை இரையாக்க முயற்சி.! திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமா? இபிஎஸ் கேள்வி
34
நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு
Image Credit : Asianet News

நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு

மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து தெய்வசெயல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

44
திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்
Image Credit : Google

திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்

இதுதொடர்பாக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
உதயநிதி ஸ்டாலின்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
20 பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்.! இரவு நேரத்தில் தொடர்ந்த இச்சை- திமுக நிர்வாகியின் மீது பகீர் புகார்
Recommended image2
அமைச்சர் PAக்கு இளம்பெண்ணை இரையாக்க முயற்சி.! திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமா? இபிஎஸ் கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved