- Home
- Tamil Nadu News
- மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
திமுகவை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கூடுதல் கொடுக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது. இப்போது ஸ்டாலினே இதை தெரிவித்து விட்டதால் ராகுல் காந்தி கடும் அப்செட் ஆகி விட்டாராம்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ், திமுக கூட்டணி நிலைக்குமா? இல்லை முறியுமா? என்பதே இப்போது தமிழகத்தின் பேசுபொருளாக உள்ளது. கூட்டணியில் உள்ள பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என திமுகவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.
ஆட்சியில் பங்கு வேண்டும்
அதிமுகவும் பாஜகவுடன் உள்ளதால் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது.
ஆனால் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்ததால் இதை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், ஒருபக்கம் ஒரு சில தலைவர்களை 'திமுக கூடுதல் சீட் தர வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என பேச வைத்து விட்டு மறுபக்கம் மற்ற தலைவர்களை 'திமுகவை விட்டு எப்போதும் வெளியேற மாட்டோம்' என கூற வைத்து டபுள் கேம் ஆடி வந்தது.
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு வேண்டி திமுகவிடம் தொடர்ந்து வம்பிழுத்து வர, செல்வபெருந்தகை திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தொடர்ந்து சொல்லி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கட்டத்தில் திமுகவும், காங்கிரம் சமூக வலைத்தளத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டன.
இந்த விவகாரத்தில் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக கருத்து கூறாமல் இருந்து வந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எல்லாத்துக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்தார்.
ஸ்டாலின் சொன்னது என்ன?
இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கத்தில் இல்லை. இது சரியான நடைமுறையாக இருக்காது. இதை நாங்களும் புரிந்துள்ளோம். அவர்களும் (காங்கிரஸ்) புரிந்துள்ளார்கள்.
ஆனால் ஒரு சிலர் தான் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். திமுக தலைவரே ஆட்சியில் பங்கு இல்லை என அறிவித்து விட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
ராகுல் காந்தியின் பிளான் என்ன?
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூட்டணி தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை இரண்டு முறை அழைத்து பேசினார். அப்போது பெரும்பாலானவர்கள் திமுகவிடம் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும். அவர்கள் கொடுக்க மறுத்தால் தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு ராகுல் காந்தியும் தலையசைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக கனிமொழி தன்னை சந்தித்தபோதும் ராகுல் காந்தி இதை வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
ராகுல் காந்தி அப்செட்
ஆனால் திமுகவை பொறுத்தவரை கடந்த முறையை விட இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கூடுதல் கொடுக்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது.
இப்போது ஸ்டாலினே இதை தெரிவித்து விட்டதால் ராகுல் காந்தி கடும் அப்செட் ஆகி விட்டாராம். திமுகவின் இந்த அதிரடி முடிவு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. ஆகவே இந்த கூட்டணி நிலைக்குமா? இல்லை உடையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

