MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேமுதிகவில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்! அண்ணியாருக்கு பறந்த கடிதம்! காரணம் விஜய பிரபாகரன்?

தேமுதிகவில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்! அண்ணியாருக்கு பறந்த கடிதம்! காரணம் விஜய பிரபாகரன்?

தேமுதிகவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி பிரேமலதாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 03 2025, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
DMDK

DMDK

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. 

26
DMDK General Committee Meeting

DMDK General Committee Meeting

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 

இதில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் 
பொருளாளராகவும், அவைத்தலைவராக மருத்துவர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு நல்லதம்பி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். 

Related Articles

Related image1
இபிஎஸ் பிரம்மாண்ட கூட்டணி கனவுக்கு செக்.! அதிமுகவிற்கு குட் பாய் சொல்லும் பிரேமலதா.?
Related image2
தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்
36
Nallathambi

Nallathambi

முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி பரபரப்பு கடிதம் 

அதில், தேமுதிக பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி அண்ணியார் அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது. கழகத்தின் உண்மை விசுவாசி ஆகிய நான் கழகத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களுக்காக, கேப்டன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

46
vijaya prabhakaran

vijaya prabhakaran

விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும்

விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். நான் மக்கள் மன்றத்திலும் கழகத்திலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன். மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டன் அவர்களின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புத்தம்பி இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல், தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.

56
Premalatha Vijayakanth

Premalatha Vijayakanth

ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்

எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணி பிரேமலதா அவர்களின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கழகத்தின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கும், கழக பொருளாளர் தளபதி அண்ணன் எல்.கே. சுதீஷ் அவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

66
Premalatha Vijayakanth vs Nallathambi

Premalatha Vijayakanth vs Nallathambi

விடுவிக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன்

எனவே கழக பொதுச் செயலாளர் அண்ணியார், கடந்த 30ம் தேதியன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Recommended image2
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image3
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Related Stories
Recommended image1
இபிஎஸ் பிரம்மாண்ட கூட்டணி கனவுக்கு செக்.! அதிமுகவிற்கு குட் பாய் சொல்லும் பிரேமலதா.?
Recommended image2
தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved