MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தனியார் வசமாகும் தூய்மைப் பணி: அரசுக்கு கிரீன் சிக்னல் வழங்கிய கோர்ட் - குமுறும் போராட்டக்காரர்கள்

தனியார் வசமாகும் தூய்மைப் பணி: அரசுக்கு கிரீன் சிக்னல் வழங்கிய கோர்ட் - குமுறும் போராட்டக்காரர்கள்

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Aug 20 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தனியார் வசமாகும் தூய்மை பணி
Image Credit : Google

தனியார் வசமாகும் தூய்மை பணி

சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு கொள்கை முடிவு எடுத்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி அலுவலக வளாகம் அருகே 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டத்தால் பொதுமக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

24
நீதிமன்றத்தில் முறையீடு
Image Credit : Google

நீதிமன்றத்தில் முறையீடு

இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசு, தொழிலாளர்களின் பணி ஒருபோதும் பறிக்கப்படாது. நேரடி பணி வழங்குவதற்கு பதிலாக நிர்வாகக் காரணங்களுக்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Related Articles

Related image1
Now Playing
தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு 100% உறுதி....உடனே வேலைக்கு திரும்புங்க.! மாநகராட்சி அறிவிப்பு
Related image2
தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு .! அமைச்சரவையில் அதிரடி முடிவு
34
அரசின் கொள்கை முடிவு
Image Credit : tndipr

அரசின் கொள்கை முடிவு

மேலும் ஒப்பந்த நிறுவனம் தரப்பில், “தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி மீறல் இல்லாத பட்சத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டது. இரு தரப்பு விளக்கங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி தூய்மைப் பணியாளர்களின் மனுவை முடித்து வைத்தனர்.

44
தொழிலாளர்களுக்கான பணி உத்தரவாதம்
Image Credit : Asianet News

தொழிலாளர்களுக்கான பணி உத்தரவாதம்

முன்னதாக நீதிபதியின் தீர்ப்பில், “பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுவதை அரசு உறுதி படுத்த வேண்டும். மேலும் அரசு தரப்பில் வழங்கப்பட்ட ஊதியமே ஒப்பந்த நிறுவனத்தாலும் வழங்கப்படுகிறது என்பதையும் அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவி்ட நீதிபதி, தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved