MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! 5 நாள் தான் டைம்- உடனே அறிக்கை கொடுங்க - நிர்வாகம் அதிரடி உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! 5 நாள் தான் டைம்- உடனே அறிக்கை கொடுங்க - நிர்வாகம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், காலி பாட்டில்களை வைக்க இடமில்லை என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Sep 01 2025, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் மது விற்பனை
Image Credit : our own

தமிழகத்தில் மது விற்பனை

மதுபானம் விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடை முன்பாக மதுப்பிரியர்கள் திரண்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு மது குடிப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.  

இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. மது பாட்டில்களை குடித்து விட்டு சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு உள்பட தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் இந்த சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. 

25
காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
Image Credit : our own

காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்

இந்த நிலையில் மதுபான பாட்டில்களை திரும்பபெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தினந்தோறும் 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகி வருகிறது. 

 இதன் படி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10 ரூபாயை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், பெரும்​பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்​ட​வை​யாக உள்​ளது. . இந்த குறுகிய இடத்தில் புதிதாக வரும் மது​பாட்​டில்​களை வைக்​கவே போதிய இடமில்​லாத நிலை​யில், காலி மது​பாட்​டில்​களை எங்கே வைப்​பது என டாஸ்மாக் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Articles

Related image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் குடிமகன்கள்! அரசே ரூ.10 கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
Related image2
கொடைக்கானல் போறீங்களா? ஒரே ஒரு டிக்கெட் போதும்! எல்லா இடத்தையும் ஜாலியா சுத்தி பார்க்கலாம்!
35
டாஸ்மாக் ஊழியர்கள்- சுற்றறிக்கை வெளியீடு
Image Credit : our own

டாஸ்மாக் ஊழியர்கள்- சுற்றறிக்கை வெளியீடு

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து குழு (Committee) நியமித்து டாஸ்மாக் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே 9 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. 

மேலும் இன்று (01.09.2025) முதல் சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால் பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாகவும், பல்வேறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

45
காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்
Image Credit : Asianet News

காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும் திட்டம்

காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினால் ஏற்படும் கடைப்பணியாளர்களின் பணிச்சுமையினை அறிவதற்கும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்று ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தி இத்திட்டத்திற்கு தேவைகளை அறிந்து மற்றும் பணியாளர்களின் சுமைகளைச் கள ஆய்வு செய்து குறைப்பது, எவ்வாறு இத்திட்டத்தினைச் செவ்வனே செயல்படுத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி டாஸ்மாக் முது நிலை மேலாளர், மண்டல மேலாளர் ஆகியோர் தலைமையில் மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது

55
5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
Image Credit : Asianet News

5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு

இத்திட்டத்தினை விதி முறைகளுக்குட்பட்டு தத்தம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயல்படுத்த ஊழியர்களின் கருத்துக்களை இத்திட்டத்தினை கேட்டறிந்து தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்திட வேண்டுகோள் விடபட்டுள்ளது.

 மேலும், ஒவ்வொரு மாவட்டத்தின் அறிக்கைகளை அடுத்த 5 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சுற்றிக்கை‌யில் கூறப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
மது பாட்டில்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved