MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காவிரி தண்ணீரை உடனே தமிழ்நாட்டுக்கு திறங்க.! கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவு

காவிரி தண்ணீரை உடனே தமிழ்நாட்டுக்கு திறங்க.! கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதால், மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Ajmal Khan
Published : May 22 2025, 04:07 PM IST| Updated : May 22 2025, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : iSTOCK

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதரமாக இருப்பது காவிரி ஆறாகும். அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், குறுவைப் பாசனத்திற்காக விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.

23
Image Credit : google

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 110.77 அடியாக உயர்ந்துள்ள நிலையில் நீர் இருப்பு 79.508 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தண்ணீர் தொடர்ந்து தமிழக எல்லைக்கு வந்து கொண்டுள்ளதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
Mettur Dam History: பொங்கி வரும் காவிரி நீரை சேமிக்கும் பொக்கிஷம்-மேட்டூர் அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?
Related image2
Cauvery: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு; அணை கட்ட அனுமதியுங்கள் - டி.கே.சிவக்குமார்
33
Image Credit : our own

இந்த நிலையில் இன்று காவிரி ஆணைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு திறந்துவிட வேண்டிய 31.24 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது முன்கூட்டியே திறக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கர்நாடகா
விவசாயக் கடன்
விவசாயம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved