MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • GST குறைப்பு: நீங்க மட்டும் ஸ்கோர் பண்ணலாம்னு நினைக்காதீங்க.. எங்களுக்கும் 50% பங்கு இருக்கு - ஸ்டாலின்

GST குறைப்பு: நீங்க மட்டும் ஸ்கோர் பண்ணலாம்னு நினைக்காதீங்க.. எங்களுக்கும் 50% பங்கு இருக்கு - ஸ்டாலின்

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரிக்குறைப்பை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே என பிரமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Sep 23 2025, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம்
Image Credit : Asianet News

8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம்

"ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

24
மாநில அரசுகளுக்கு சரிபாதி பங்கு உள்ளது..
Image Credit : Google

மாநில அரசுகளுக்கு சரிபாதி பங்கு உள்ளது..

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

Related Articles

Related image1
எது மலிவு, எது விலை உயர்வு? GST 2.0 இன்று முதல்.. முழு ஜிஎஸ்டி பட்டியல்
Related image2
Made In India: வெளிநாட்டுக்கு நோ சொல்லுங்க.. இந்திய பொருட்களையே வாங்குங்க! மக்களுக்கு மோடி அட்வைஸ்!
34
மாநிலங்களுக்கான நிதி தரமறுப்பு
Image Credit : Google

மாநிலங்களுக்கான நிதி தரமறுப்பு

மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

44
மாநில அரசுகளை தண்டிப்பதன் மூலம் இந்தியா வளர்ச்சிபெற முடியாது
Image Credit : F/mk stalin

மாநில அரசுகளை தண்டிப்பதன் மூலம் இந்தியா வளர்ச்சிபெற முடியாது

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
நரேந்திர மோடி
ஜி.எஸ்.டி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved