MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

1 Min read
Rayar r
Published : Oct 21 2025, 07:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை
Image Credit : google

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதேபோல் சென்னையிலும் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

சென்னை எழும்பூர், அண்ணாநகர், சென்ட்ரல், சிந்தாரிப்பேட்டை என நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

24
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
Image Credit : our own

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

கிருஷ்ணா நதிநீர் வருகை அதிகரித்ததாலும், புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில், இன்று நீர்மட்டம் 21.20 அடியை தொட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
வேகமெடுக்கும் பருவமழை! மக்களுக்கு உதவ தொண்டர் படைகளை களமிறக்கும் திமுக, அதிமுக!
Related image2
தமிழகத்தில் விடாது வெளுக்கும் கனமழை! களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
34
எந்தெந்த பகுதிகளில் வெள்ள அபாயம்?
Image Credit : Google

எந்தெந்த பகுதிகளில் வெள்ள அபாயம்?

வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, சிறுகளத்தூர் ஆகிய இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

44
சென்னையில் அதிக மழை எங்கே?
Image Credit : ANI

சென்னையில் அதிக மழை எங்கே?

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் நான்கு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகப்பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 சென்டிமீட்டர் மழை கொட்டியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மேடவாக்கம் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
கனமழை
தமிழ்நாடு
வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved