MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2 லட்சம் கொடுத்திருக்கேன் எனக்கு பரிவட்டம் கட்டுங்க.! அடம்பிடித்த திமுக பேரூராட்சி தலைவியின் கணவன்- போலீசார் வழக்கு

2 லட்சம் கொடுத்திருக்கேன் எனக்கு பரிவட்டம் கட்டுங்க.! அடம்பிடித்த திமுக பேரூராட்சி தலைவியின் கணவன்- போலீசார் வழக்கு

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில், பேரூராட்சி பெண் தலைவர் கீதா தனது கணவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது

2 Min read
Ajmal Khan
Published : May 14 2025, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா
Image Credit : Asianet News

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக இந்த தேரோட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வீரபாண்டி பேரூராட்சி பெண் தலைவரான திமுகவைச் சேர்ந்த கீதா என்பவருக்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டினார்.

24
பேரூராட்சி தலைவரின் கணவருக்கு பரிவட்டம்
Image Credit : Asianet News

பேரூராட்சி தலைவரின் கணவருக்கு பரிவட்டம்

இதனைத் தொடர்ந்து தனது கணவர் சசி என்பவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று பேரூராட்சி திமுக பெண் தலைவர் கீதா வேண்டுகோள் விடுத்தார். இது அரசு நிகழ்ச்சி என்பதால் அரசு பதவிகளில் இல்லாதவருக்கு பரிவட்டம் கட்ட முடியாது என்று கூறியதால் கீதா கொந்தளித்தார். அருகில் நின்றிருந்த அவரது கணவர் சசி "இரண்டு லட்ச ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளேன்" எனக்கு பரிவட்டம் கட்ட மாட்டீர்களா? என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எதிரிலேயே பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்த அர்ச்சகர்களிடம் கொந்தளித்தார். 

Related Articles

Related image1
Theni: பள்ளிகளில் சாதி மோதல்களை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட நீதிபதியின் அறிக்கையை கிழித்த ஊராட்சி துணைத்தலைவர்
Related image2
Tirupati Temple: டோட்டலாக மாறும் திருப்பதி கோவில்! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
34
அறநிலையத்துறை அதிகாரிகளோடு மோதல்
Image Credit : Asianet News

அறநிலையத்துறை அதிகாரிகளோடு மோதல்

இதனால் வேறு வழி இன்றி அவரை சமாதானப்படுத்திய அர்ச்சகர்கள் அவருக்கும் மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டினார்கள். தேரோட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அடியாட்களுடன் சென்ற பேரூராட்சி பெண் தலைவர் கீதா, அவரது கணவர் சசி ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளை ஆபாசமாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. 

அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி பேரூராட்சி தலைவர் கீதா அவரது கணவர் சசி உள்ளிட்டோர் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யக் கூடாது என திமுக தலைமையில் இருந்து காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.

44
பேரூராட்சி தலைவர் கீதா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்
Image Credit : Asianet News

பேரூராட்சி தலைவர் கீதா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து வேறு வழியில்லாமல், வீரபாண்டி காவல்துறையினர்,தாக்குதல் நடத்தப்பட்டதை மறைத்து,பேரூராட்சி தலைவர் கீதா மற்றும் அவரது கணவர் சசி உள்ளிட்ட சிலர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக பேரூராட்சி பெண் தலைவர் கீதா ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளராக பதவியில் உள்ள நிலையில், அவரது கணவர் சசி கட்சிப் பதவியில் கூட இல்லை.எந்த அடிப்படையில் அவருக்கு அரசு நிகழ்ச்சியில் பரிவட்டம் கட்டப்பட்டது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கோவில் நிகழ்வுகள்
காவல்
குற்றம்
திமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved