MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவையில் நடந்த கோர விபத்து! 100 கி.மீட்டர் வேகம்! 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ப*லி

கோவையில் நடந்த கோர விபத்து! 100 கி.மீட்டர் வேகம்! 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ப*லி

Coimbatore Car Accident: கோவை செட்டிப்பாளையம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Oct 25 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார் மரத்தில் மோதி விபத்து
Image Credit : Asianet News

கார் மரத்தில் மோதி விபத்து

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

24
நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு
Image Credit : Google

நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடு இடிபாடுகளில் சிக்கிய படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
சென்னையில் கரையை கடக்கப்போகிறதா புயல்? மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் ட்விஸ்ட்
Related image2
இபிஎஸ்-ஐ முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டுட்டு வந்தாரு? TTV தினகரன் மாஸ் கேள்வி
34
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரகாஷ்(22), ஹரிஷ்(22), சபரி(21), அகத்தியன்(20) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதில், பிரபாகரன் (19) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

44
மதுபோதையில் விபத்து
Image Credit : freepik

மதுபோதையில் விபத்து

மேலும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
விபத்து
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved