- Home
- Tamil Nadu News
- எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
பெங்களூரைச் சேர்ந்த வெவ்வேறு சமூக காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணியில் திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை குடும்பத்தினரை விடுதியில் புகுந்து அரிவாளால் வெட்டி, பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவரது மகன் ராகுல். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் காதலுக்கு ராகுலின் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து நேற்று உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணிக்கு காதல் ஜோடியும் காதலன் குடும்பத்தினரும் அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, சித்தப்பா, சித்தி, தங்கச்சி உள்பட 8 பேர் வந்துள்ளனர். அப்போது ராகுலுக்கும் கீர்த்தனாவுக்கும் வேளாங்கண்ணியில் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தொடர்ந்து காதலன் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதல் ஜோடியுடன் தங்கியிருந்தனர். தகவல் அறிந்த பெங்களூரில் இருந்த கீர்த்தனா குடும்பத்தினர் சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் புகுந்து காதலன் மற்றும் அவரது குடும்பத்தையும் அரிவாளால் வெட்டி, பெண்ணை தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தடுக்க முயன்ற காதலன் ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ், அம்மா கலையரசி ஆகியோர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்ற குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதால் வேளாங்கண்ணியில் மாப்பிள்ளை வீட்டார்களுக்கு சரமாரியாக குத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் இந்து மதத்தையும், ஆண் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

