MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீட்டிற்கு சென்று அசிங்கமாக திட்டிய தனியார் வங்கி! சேலம் விவசாயி தற்கொலை! நடந்தது என்ன? கொதிக்கும் அன்புமணி!

வீட்டிற்கு சென்று அசிங்கமாக திட்டிய தனியார் வங்கி! சேலம் விவசாயி தற்கொலை! நடந்தது என்ன? கொதிக்கும் அன்புமணி!

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மதிக்காமல் கந்துவட்டிக்காரர்களைப் போல தனியார் வங்கிகள் நடந்துகொள்வதே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : May 01 2025, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
anbumani ramadoss

anbumani ramadoss

ரிசர்வ் வங்கியின்  வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தான் உழவர்களின் தற்கொலைக்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த  துக்கியாம்பாளையத்தைச்  சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான  தவணையை திரும்பச் செலுத்த 20 நாள்கள்  தாமதமானதற்காக வங்கி ஊழியர்கள் திட்டியதால், மன உடைந்து  நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  உழவர் வடிவேலுவை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

24
Salem farmer commits suicide

Salem farmer commits suicide

தரக்குறைவாக திட்டிய வங்கி பணியாளர்கள்

உழவர் வடிவேல் வேளாண் பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.80 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த  ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.  அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Related Articles

Related image1
பாஜகவை கை கழுவுகிறதா பாமக.! புதிய கூட்டணியா.? ராமதாஸ் வெளியிட்ட பதிவுக்கு காரணம் என்ன.?
Related image2
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்! அன்புமணி வெளியிட்ட முக்கிய தகவல்!
34
private bank

private bank

கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்ளும் தனியார் வங்கிகள் 

கடன் தவணையை செலுத்தத் தவறும் அல்லது தாமதிக்கும்  உழவர்களை திட்டுவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும், எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடன் தவணையை செலுத்த ஒருவர் தவறினால், அவருக்கு முறைப்படி அறிவிக்கை அனுப்பி அவரிடம் விளக்கம் பெற வேண்டும்; அவர் கடனை செலுத்த போதிய காலக்கெடு வழங்க வேண்டும்; அதன்பிறகும் அவர் கடனை செலுத்தவில்லை என்றால் மட்டும் தான் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின்  வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தான் உழவர்களின் தற்கொலைக்கு காரணம் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. உழவர் வடிவேலின் தற்கொலை தான் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் எந்த உழவரும் இதுபோல் தற்கொலை கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில்  இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

44
tamilnadu government

tamilnadu government

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ,  வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ  5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம்  விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு  உழவர்களுக்கு தாரளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என அன்புமணி கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved