MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?

அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?

திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

2 Min read
vinoth kumar
Published : May 22 2025, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
Image Credit : Asianet News

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பளரான தெய்வச்செயல். இவர் தம்மை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கல்லூரி மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

24
முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்
Image Credit : Asianet News

முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

இளம் பெண்ணின் புகாரின் பேரில் தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் தெய்வ செயலின் மனைவி கனிமொழியும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Articles

Related image1
பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாள்கள் தான் இருக்கு! ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி பறிப்பா? அன்புமணி!
Related image2
லாரி லாரியாக வந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு? காய்கறி நிலவரம் என்ன?
34
திருமணம்
Image Credit : Asianet News

திருமணம்

அதில் புகாரளித்த இளம் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து கோரி அவரின் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே விவகாரத்து கிடைக்கவில்லை. எனக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் கரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது உண்மைதான். எனக்கு எதிராக புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் எனக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்பதால் எனக்கும், என் மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

44
முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
Image Credit : chennai high court

முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

இதுதொடர்பாக வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெய்வ செயலுக்கும், அவரது மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால், தெய்வச்செயல், அவரின் முதல் மனைவி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
திமுக
சென்னை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved