MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Oct 10 2025, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவருடைய புதிய வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி திரு​வேங்​கடம் மட்டும் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். மேலும் சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

24
சிபிஐ விசாரணை
Image Credit : our own

சிபிஐ விசாரணை

இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை விசாரித்தன்னை உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டது.

Related Articles

Related image1
வெளியில் வரும் ஏ2 ரவுடி அஸ்வத்தாமன்.! கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் குரூப்! பதற்றத்தில் சென்னை!
Related image2
யூடன் அடித்து நீதிபதி செந்தில் குமாருக்கு எதிராக திரும்பிய சுப்ரீம் கோர்ட்! சூட்டைக் கிளப்பிய தவெக! தமிழக அரசுக்கு திருகு வலி.!
34
தமிழக அரசு
Image Credit : Google

தமிழக அரசு

இந்த உத்தரவுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். தமிழக காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றுவதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.

44
உச்சநீதிமன்றம்
Image Credit : Google

உச்சநீதிமன்றம்

எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு அரசு
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
உச்ச நீதிமன்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved