MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் கணவர் இப்படி பட்டவரா! கோழி ராஜனின் உண்மை முகத்தை கிழித்த அண்ணாமலை!

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் கணவர் இப்படி பட்டவரா! கோழி ராஜனின் உண்மை முகத்தை கிழித்த அண்ணாமலை!

நாகர்கோவில் திமுக பிரமுகர் ராஜன் மீது நிதி மோசடி மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளுநர் நிகழ்வில் பட்டம் பெற மறுத்ததன் மூலம், பொதுமக்கள் புகாரை திசை திருப்ப முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Aug 16 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆளுநரிடம் மாணவி பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டம் பெற மறுத்த மாணவி நாகர்கோவில் திமுக பிரமுகரான ராஜன் என்பவரது மனைவி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் சமூக விரோதிகளைப் பாதுகாத்து பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு விரைவில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

25
Image Credit : Google

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே. இரண்டு நாட்களுக்கு முன்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆளுநர் மீது விமர்சனம் வைப்பதாக நாடகமாடிய நாகர்கோவில் திமுக மாநகர இணைச் செயலாளரான ராஜன் என்ற நபர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவில் மக்களால், கோழி ராஜன், தடியன் ராஜன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த, தன் மீது பல குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு நபர்.

Related Articles

Related image1
குறி வைக்கப்படும் திமுக அமைச்சர்? அப்போ IT, இப்போ ED - தப்புவாரா ஐ.பெரியசாமி
Related image2
சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க!
35
Image Credit : Twitter

நாகர்கோவிலில் உள்ள, புகழ்பெற்ற சவேரியார் கோவிலுக்கு, அரசு ஒதுக்கிய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை, இந்த கோழி ராஜன் சுருட்டி விட்டதாகவும், அந்தப் பணத்தில், பல சொத்துக்களும், தனது மனைவி பெயரில் இன்னோவா காரும் வாங்கியிருப்பதாக, நாகர்கோவில் மக்கள் புகார் கூறியிருக்கின்றனர். இந்த நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியும், அதற்குப் பதிலளிக்க மறுக்கிறார்கள். மேலும், இந்த நபர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தும், அந்தப் புகார், கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

45
Image Credit : Asianet News

இது தவிர, தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், பள்ளி அருகே, குடித்து விட்டு மாணவ, மாணவியருக்குத் தொந்தரவாகக் கூச்சலிடுவதும் என, இந்த கோழி ராஜன் மீது, நாகர்கோவில் கோட்டாறு பரதர் தெற்கு ஊர் மக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் என அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இன்று வரை, கோழி ராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது திமுக அரசு. இதற்கு ஒரே காரணம், இந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். பொதுமக்கள் தன் மீது அளித்த புகாரைத் திசைதிருப்ப, ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடியிருக்கிறார் கோழி ராஜன்.

55
Image Credit : Google

கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு, தமிழக அரசு ரூ.2.28 கோடி ஒதுக்கீடு செய்து, முதல்கட்டமாக ரூ.1.14 கோடி வழங்கியிருக்கிறது. இந்த நிதிக்கான கணக்கினை ஊர்ப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏன் மறுக்கிறார்கள்? பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் கோழி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்டக் காவல்துறை ஏன் தயங்குகிறது? தொடர்ந்து சமூக விரோதிகளைப் பாதுகாத்து, பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு, விரைவில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
தமிழ்நாடு
அரசியல்
மு. க. ஸ்டாலின்
திமுக
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved