MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாதம் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை.! ஊழியர்களுக்கு இரவோடு இரவாக வெளியான சூப்பர் அறிவிப்பு

மாதம் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை.! ஊழியர்களுக்கு இரவோடு இரவாக வெளியான சூப்பர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களான போக்குவரத்து ஊழியர்கள், மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை போல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு தலையிட்டு நிறுவன நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டியதாக அறிவித்துள்ளது.

3 Min read
Ajmal Khan
Published : Oct 08 2024, 07:29 AM IST| Updated : Oct 08 2024, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Samsung

Samsung

ஊதிய உயர்வு போராட்டம்

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பாக ஊதிய உயர்வு, நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், மின்வாரிய ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.இவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

அப்படி செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்று தான் சாம்சங் நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சாம்சங் நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தது.

26

தமிழக அரசு பேச்சுவார்த்தை

இதனையடுத்து போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் தமிழக அரசு தலையிட்டு போராட்டத்தை சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் படி வெளியிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 

1. நிறுவனம், பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து, ஊதியத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும்.

2. ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும்.

3 இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

4 தற்பொழுது உள்ள 5 வழித்தடங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் இயக்கம் அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
 

36

மாதம் 5ஆயிரம் ஊக்கத்தொகை

5. தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 4 எண்ணிக்கையிலிருந்து 6ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்கும் குடும்பத்திற்கு சுமார் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.

6 பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக, ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்) கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும்.

7. கம்பரஸர் கட்டிடத்தில் ஒரு புதிய மருத்துவ அறை நிறுவப்படும்.

8. நிறுவனத்தின் கேண்டீனில் வழங்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும். 

9. தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் ஓய்வறைகள் மேம்படுத்தப்படும். மேலும், பழுதடைந்த வாக்கர்கள் மாற்றப்படும்.
10. தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் பாதைக்கு கூரை அமைத்துத் தரப்படும்.
 

46

விடுப்பு நாட்கள் அதிகரிப்பு

11. தொழிலாளர்களுக்கு கீழ்கண்டவாறு விடுப்புகள் உயர்த்தி வழங்கப்படும்.

அ. திருமணம் செய்யும் தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.

முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கான தந்தையர்களுக்கு மகப்பேறு (ஆண் தொழிலாளர்களுக்கு) விடுப்பு மூன்றிலிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தி அதிகரிக்கப்படும்.

இ. பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து விடுமுறை எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும்.

12. தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2000/- பரிசாக வழங்கப்படும்.

13. தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு. 'MD's People First Promise." என்ற திட்டம் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.

14. தொழிலாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து கண்டறிய குறை தீர்ப்பு மையம் மேம்படுத்தப்படும்.

15. மேற்கண்டவை தவிர. தொழிலாளர்களின் கூடுதல் கோரிக்கைகளையும். பணிச்சூழலில் மேம்பாடுகள் செய்யவும். தொழிற்சாலையில் செயல்படும்

56

பணிக்கு திரும்ப அழைப்பு

தொழிலாளர் குழுவுடன் விவாதித்து. உடனுக்குடன் தீர்வு காணப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சாம்சங் நிறுவனம் எடுத்திருக்கும் இந்த நல்ல முடிவுகளை ஏற்று வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு நிறுவனம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66
Protest, citu

Protest, citu

தமிழக அரசுக்கு தொழிற்சங்கம் கண்டனம்

ஆனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்க சிஐடியூ தொழிற்சங்கம் மறுத்து விட்டது. பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறபோது அவர்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறோம் என்று சொன்ன இந்த அமைச்சர்கள் புறவழியாக சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்து ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக  செய்திவெளியிடுவதும் குழப்பம் ஏற்படுத்துவதும் சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சிஐடியூ வன்மையாக கண்டிக்கிறது. நம்முடைய வீரம் செறிந்த வேலைநிறுத்தம்  போராட்டம் தொடரும் நாளை போராட்ட பந்தலில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு சங்கமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved