MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில் அடைப்பு.! இதுதான் காரணமா.?

குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில் அடைப்பு.! இதுதான் காரணமா.?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி குண்டா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருமாவளவன் மீதான சமூக வலைதள அவதூறுப் பதிவுகள் இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Sep 15 2025, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஏர்போர்ட் மூர்த்தி விசிக மோதல்
Image Credit : Asianet News

ஏர்போர்ட் மூர்த்தி - விசிக மோதல்

ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவராக உள்ளார். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் பிரபலமானவர். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அருகில் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

பட்ட பகலில் நடு ரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக, ஏர்போர்ட் மூர்த்தி விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

23
நடு ரோட்டில் மோதிக்கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி
Image Credit : Asianet News

நடு ரோட்டில் மோதிக்கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி

இந்த மோதலின் போது ஏர்போர்ட் மூர்த்தி தன்னைத் தற்காத்துக்கொள்ள கையில் இருந்த கத்தியை பயன்படுத்தி விசிக உறுப்பினர்களைத் தாக்கியதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். இரு தரப்பினரும் போலீஸில் புகார் அளித்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி, மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை அடையாறு வீட்டில் வைத்து கைது செய்தனர். அவருக்கு எதிராக கொலை முயற்சி (IPC பிரிவு 307), ஆபாசமான பேச்சு, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

செப்டம்பர் 8ஆம் தேதி, கொலை முயற்சி பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டது. பின்னர் ஒரு நாள் கஸ்டடி கேட்டு மனு அளித்த எழும்பூர் நீதிமன்ற அனுமதி பெற்று மெரினா காவல்துறை அவரை விசாரணை மேற்கொண்ட நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் டிஜிபி அலுவலகம் அருகே அவர் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related Articles

Related image1
கொட்டைய (புளி)எப்படி எடுக்கணும்னு அதிமுக ஆட்சி வந்த பிறகு காட்றேன்.! மாசுபிரமணியத்துக்கு ஈபிஎஸ் பதில்
Related image2
'ஏர்போர்ட்' மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! ஜாமீனுக்கு ஆப்பு வைத்த டிஜிபி!
33
குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில அடைப்பு
Image Credit : Asianet News

குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில அடைப்பு

பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் (செப்டம்பர் 14ஆம் தேதி,)சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, 

ஏர்போர்ட் மூர்த்தியை குண்டா சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சிறைத்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஏர்போர்ட் மூர்த்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தொல். திருமாவளவன்
காவல்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved