MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 03 2025, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அதிமுகவில் தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோதே விஜயபாஸ்கர் மீது திமுக குட்கா உள்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்வைக்கப்பட்டது. குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடடைபெற்று வருகிறது.

24
Image Credit : Asianet News

இதனிடையே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு வந்தது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இரண்டு நாட்கள் வரை நடந்த சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

Related Articles

Related image1
போலீஸ்காரர் மேல கை வச்சுட்டாங்க! இவங்கள சும்மா விடக்கூடாது! வட மாநிலத்தவர் எதிராக கொதித்த வேல்முருகன்!
Related image2
பார்த்ததுமே பத்திக்கிச்சு! 11ம் வகுப்பு மாணவனுடன் 27 வயது இளம்பெண் லாட்ஜில் ரூம்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
34
Image Credit : Asianet News

இதனையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிராக கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் 10,000 பக்கங்கள் கொண்ட 800 சொத்து ஆவணங்களின் விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

44
Image Credit : Asianet News

இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஜராகததால் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
போலீஸ்காரர் மேல கை வச்சுட்டாங்க! இவங்கள சும்மா விடக்கூடாது! வட மாநிலத்தவர் எதிராக கொதித்த வேல்முருகன்!
Recommended image2
பார்த்ததுமே பத்திக்கிச்சு! 11ம் வகுப்பு மாணவனுடன் 27 வயது இளம்பெண் லாட்ஜில் ரூம்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved