MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி சொகுசா ரயில் பெட்டியில் கம்மியான கட்டணத்திலேயே தங்கலாம்.! ரயில்வே துறை சூப்பர் திட்டம்- எங்கே தெரியுமா.?

இனி சொகுசா ரயில் பெட்டியில் கம்மியான கட்டணத்திலேயே தங்கலாம்.! ரயில்வே துறை சூப்பர் திட்டம்- எங்கே தெரியுமா.?

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகள் தங்கும் அறைகளாக மாற்றப்பட உள்ளன. பயன்படுத்தப்படாத 5 ரயில் பெட்டிகள் சொகுசு விடுதிகள் போல் மாற்றியமைக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Jul 07 2025, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Freepik

இயந்திர வாழ்க்கைக்கு ஈடாக மக்கள் நாள் தோறும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எப்போதாவது விடுமுறை கிடைத்தால் சுற்றுலாவிற்கு செல்ல தொடங்கிவிடுவார்கள். குடும்பத்தோடோ அல்லது நண்பர்களோடு மலைப்பகுதிகள், குளுமையான மற்றும் இநயற்கையான சுற்றுலா, ஆன்மிக சுற்றுல செல்ல தொடங்கி விடுவார்கள். 

அதிலும் பல இடங்களுக்கு செல்லும் போது தங்கும் விடுதி கட்டணம் மட்டுமே பல மடங்கு வசூலிப்பார்கள். ஒரு நாளைக்கு ஒரு அறைக்கு 3 ஆயிரம் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால் மாத பட்ஜெட்டில் பெரிய அளவு பற்றாக்குறை ஏற்படும். எனவே குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்வதற்கே மக்கள் விரும்புவார்கள்,

25
Image Credit : our own

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் ஆன்மிக சுற்றுலா இடங்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் ராமேஸ்வரத் தீவானது ஆன்மிகத்திற்கு புகழ் பெற்றது. ராமேஸ்வரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனிதமான தலமாகும், இது பல சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களால் சூழப்பட்டுள்ளது.

 ராமநாதசுவாமி கோயில் ராமேஸ்வரத்தின் மையமான இந்தக் கோயில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இங்கு 22 புனித தீர்த்தங்கள் உள்ளன, இவை பக்தர்களால் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அக்னி தீர்த்தம் கோயிலுக்கு அருகில் உள்ள கடற்கரை, புனித நீராடலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

Related Articles

Related image1
பைக் அடிக்கடி ரிப்பேர் ஆகுதா.? பராமரிப்பு செலவை குறைக்க இதோ அசத்தலான வழிகள்!
Related image2
நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம்: நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்
35
Image Credit : our own

தனுஷ்கோடி "இந்தியாவின் கடைசி முனை" என்று அழைக்கப்படும் இந்த இடம், இலங்கையை நோக்கிய கடற்கரையில் அமைந்துள்ளது. இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடம். கோதண்டராமர் கோயில் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள இந்தக் கோயில், ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் விபீஷணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ராமாயணத்துடன் தொடர்புடையது. ஜடா தீர்த்தம் ராமர் தனது தலைமுடியை (ஜடை) கழுவிய இடம் என்று நம்பப்படும் இந்த புனித தீர்த்தம், கோயிலுக்கு அருகில் உள்ளது. இது மட்டுமில்லாமல் பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற சிறப்பை பெற்றது. மண்டபத்தில் இருந்து பாம்பனை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 

45
Image Credit : Asianet News

ராமேஸ்வரத்தை இந்திய பிரதான நிலப்பகுதியுடன் இந்த பாலம் இணைக்கிறது. ராமேஸ்வரத்தில் மற்றொரு சிறப்பாக அப்துல் கலாம் நினைவு இல்லம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வீடு, இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளைப் பற்றி அறியலாம். 

எனவே ராமேஸ்வரத்திற்கு தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் நகர் முழுவதும் ஏராளமான தங்கும் விடுதிகள் தொடங்கப்படுள்ளது. இருந் போதும் அதிக கட்டணங்களால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அசத்தலான திட்டத்தை தொடங்கவுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

55
Image Credit : Asianet News

இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத 5 ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளது. அந்த ரயில் பெட்டியில் உட்புறத்தில் சொகுசான விடுதிகள் போல் மாற்றங்கள் ண செய்து பயணிகளின் வாடகைக்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 5 ஆண்டு கால ஒப்பந்த பணிக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெறுபவர்கள் ரயில் பெட்டிகளின் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக்கும் பணியை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரயில்வே சார்பாக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த மின்னணு ஒப்பந்தம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு ஒப்பந்தங்கள் ஜூலை 15 மதியம் 12 மணிக்குள் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
ரயில்
தொடர்வண்டி விதிகள்
உணவு விடுதி வணிகம்
தென்னக இரயில்வே
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved